பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவ.1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டது. இதனால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் உயர்வை ஒன்றிய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனைதொடர்ந்து கடந்த மாதம் டிச.1 ஆம் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 ஆக குறைந்தது.
இந்த நிலையில் 2022 ஜனவரி 1 ஆம் தேதி நூல் விலையை கிலோவுக்கு ரூ.30 ஆக உயர்த்தியுள்ளனர். இதனால் புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும், எடுத்த ஆர்டர்களுக்கு தேவையான நூலைக் கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய செய்ய வாய்ப்புள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.