திருப்பூர், ஆக. 14 - திருப்பூரில் பல நாட்களாக அப் புறப்படுத்தப்படாமல் மலை போல் குவிந்திருந்த குப்பை மீது அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. இதை யடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை அகற்றினர். திருப்பூர் மாநகராட்சி 9ஆவது வார்டு டவர்லைன் சாலை பகுதி யில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடு களில் நான்காயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் அடர்த்தி மிகுந்த இப்பகுதி யில் கடந்த இரு வார காலமாக மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அகற்ற வரவில்லை. அத்துடன் சமீ பத்தில் பெய்த மழையால் குப்பை கொட்டும் இடத்தில் கடும் துர் நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. கொசுத் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தை கள் பலருக்கும் காய்ச்சல் பரவி வரு கிறது. இதுபோன்ற பொதுமக்க ளின் சுகாதாரத்தில் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் மாநகராட் சியை கண்டிக்கும் வகையில் இரு வாரகாலமாக அள்ளப்படாமல் மலை போல் தேங்கியிருக்கும் குப்பை மீது மக்கள் அதிகாரம் அமைப்பினர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மாந கராட்சி அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் குப்பை அள்ளும் வரை போராட்டம் தொடரும் என தெரி விக்கப்பட்டதால், மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் குப்பை அங்கிருந்து உடனடியாக அகற்றப் பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.