திருப்பூர், நவ.1- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரெட்டிபாளையம் ராதா அரிசி ஆலை பிரிவில் ஐந்தாம் நாளாக ஞாயிறன்று நடைபெற்று வரும் உயர்மின் கோபுரத்திற்கு எதிரான விவசாய சங்கங்களின் காத்திருப்பு போராட்டத்திற்கு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச் சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் வருகைதந்தார். அவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடி கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இக்கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகள் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பதாக தெரி வித்தார்.