திருப்பூர், ஜூன் 15- திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போய் மானாவாரி சாகு படியை நம்பி இருக்கும் கிழக்குப் பகுதியில் ஆடு, கோழி போன்ற கால்நடைகள் வளர்ப்பே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் ஈட்டும் தொழிலாக உள்ளது. ஆனால் பண்டிகை காலங்களில் ஆடு களைத் திருடிச் செல்வது அதிகமாக இருப் பதால் கிடைக்கும் வருமானமும் பறிக் கப்படுவதாக வேதனைப்படுகின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர், வெள்ளகோவில், ஊத்துக்குளி மற்றும் பல்லடம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன. கிராமப்புற சாலைகளின் அருகே அமைந்துள்ள மானா வாரி விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் செம்மறி ஆடுகள் அடிக்கடி திருட்டு போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவு குறைந்து போதிய மழை இல்லாமல் போவதால் விவசாயிகள் வேறு வழியின்றி ஆடு வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இப் பகுதிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களது குறைந்த அளவிலான நிலங் களில் 10 முதல் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். வறட்சியின் காரண மாக தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக் குறை உள்ள நிலையில் அவற்றை விலை கொடுத்து வாங்கி ஆடு வளர்ப்பில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய விழா நடக்கும் நாட்கள் நெருங்கும் வேளையில் கிராமப் புறங்களில் சாலையின் அருகாமையில் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர்ந்து நடப்பதாக விவ சாயிகள் கூறுகின்றனர். சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆளில்லாத நேரத்தை பயன்படுத்தி மேய்ச்சல் நிலங் களில் இருக்கும் ஆடுகளைத் திருடுவது அதிகரித்திருப்பதாக விவசாயிகள் கவலைப்படுகின்றனர். வறண்ட பகுதிகளில் ஆடு வளர்ப்பு மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலையில் இவ்வாறு தொடர்ந்து ஆடுகள் திருடப் படுவதால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானமும் கூட பறிக் கப்படுகிறது. இதனைத் தடுக்க காவல் துறையினர் இரவு நேரங்களில் இப் பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகப் படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.