திருப்பூர், அக். 19 – திருப்பூர் மாநகரில் பல பகுதிகளில் கழிவுநீர் தேங்கிய நிலையில், அள்ளப் படாத குப்பை குவிந்திருக்கும் நிலை யில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுவி னால் பரவும் நோய்களைக் கட்டுப்ப டுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது. குறிப்பாக, தற்போது மழை கால மாக இருப்பதாலும், இம்மாநகராட்சி பகுதியில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது இம்மாநக ராட்சி பகுதியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் 300வீடுகளுக்கு ஒரு கொசு தடுப்புபணியாளர் வீதம் மொத் தம் 500 நபர்களை பணிக்கமர்த்தி வீடு, வீடாகச் சென்று கொசு உற்பத் தியை கண்டறிந்து அவற்றை அழித்து, தேவையற்ற பொருட்களை அப்புறப் படுத்தி, தேக்கி வைத்துள்ள தண்ணீ ரில் அபேட் மருந்து ஊற்றியும் வருவ தாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பகுதிகளி லும் கூட்டுத் துப்புரவு பணி மேற் கொண்டு கொசு உற்பத்தியைக் கட் டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பகுதிகளிலும் முறையான வடிகால் வசதி இல்லாமல் கழிவுநீர் பெருமளவு தேங்கி நிற்பதுடன், குப்பை அள்ளப்படாமலும், பல இடங்களில் துர்நாற்றமும், பூச்சி, ஈக்கள் மொய்க்க பரவலாக தேங்கியிருக்கிறது.
நிலவேம்புக் குடிநீர்
எனினும் அனைத்து வார்டு பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகி றது. மருத்துவ முகாம்களும் நடத்தப் பட்டு அதில் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் முன்பு, வீடுகளில் பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரைக் காலி செய்து மூடிவைத்து கொசு உற்பத்தி நடைபெறாதபடி பொதுமக்கள் மாந கராட்சிக்கு ஒத்துழைப்பு தரும்படி ஆணையர் சிவக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தூய்மை தூதுவர்கள்
சனியன்று மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் மற்றும் மாநகர் நல அலுவ லர் கே.பூபதி ஆகியோர் முதல் மண்ட லம் வேலம்பாளைம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு களப்பணியை ஆய்வு செய்தனர். ஏவிபி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு கொசு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கி,“என் வீட்டிற்கும், தெருவுக்கும் பள்ளிக்கும் நான் ஒரு தூய்மை தூது வர்” என்ற அடையாள அட்டை வழங்கி மாணவ, மாணவியர் ஊக்குவிக்கப் பட்டனர்.
எச்சரிக்கை, அபராதம்
பொதுமக்கள் தண்ணீரைச் சேமித்து வைத்து, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் / குடியிருப்போ ருக்கு வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என்று எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்து டன் அபராதமும் விதித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொசு தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக் கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங் கும்படி மாநகராட்சி சார்பாக ஆணை யர் க.சிவக்குமார் கேட்டுக்கொண் டுள்ளார்.