திருப்பூர், ஜூன் 17 – திருப்பூரில் பவர்டேபிள் ஜிஎஸ்டி பில் பிரச்சனைக்கு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப் பட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு: திருப்பூரில் இருக்கும் பிரபல உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் ஜாப் ஒர்க் அடிப்படையில் பவர்டேபிள் நிறுவனங்களுக்கு கட்டுகள் கொடுத்து தைத்து வாங்கப்படுகிறது. இந் நிலையில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் மற்றும் கூலி தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும், அந்த நிறுவனத்தில் ஜாப் ஒர்க் அடிப்படையில் கட்டுகளை வாங்கித் தைத்துக் கொடுக்கும் பவர்டேபிள் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பவர்டேபிள் இயக்கப்படாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனவே சம்பந்தப்பட்ட ஜெ.ஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் பவர்டேபிள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜெ.ஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சார்பில் நவின் சக்சாரியா, சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், செயலாளர் எம்பரர் வி.பொன்னுசாமி, துணைத் தலைவர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.ஜி.நடராஜ் ஆகியோரும், பவர்டேபிள் சங்கச் செய லாளர் ஆர்.நந்தகோபால், இணைச் செயலாளர் கே.எஸ்.முருகேசன், துணைத் தலைவர் எஸ்.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த முத்தரப்புக் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராதவர்கள் ஜிஎஸ்டி போட வேண்டியதில்லை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பில்களுக்கு வழக்கம் போல் ஜிஎஸ்டி போட்டு பில் தருவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. பில்களுக்குண்டான தொகை முழுவதும் பில் கொடுத்த நாளில் இருந்து 10 நாட்களுக்குள் முழுவதும் கொடுப்பது என நிறுவனத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. மாதத் தில் 2 முறை மட்டும் பில்கள் தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சரக்கு எடுப்பது, டெலிவரி கொடுப்பது திங்கள், செவ் வாய், புதன், வியாழன் நாட்களில் செக்ஷன்கள் பிரிக்கப் பட்டு குறுகிய நேரத்தில் வேலையை முடிப்பது என முடிவு செய்து ஒப்புக் கொள்ளப்பட்டது. இதர விஷயங்கள் இரு தரப்பும் சுமூகமாக பேசிக் கொள்வதென ஒப்புக் கொள் ளப்பட்டது.