tamilnadu

img

திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்திற்கு சீல்

திருப்பூர், ஏப்.19-திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட எல்.ஆர்.ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேட்டி அளிக்கையில் கூறியதாவது:வாக்குப்பதிவான இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இம்மையம், சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் காட்சி மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது . வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை காண்பித்தது குறித்து எழுத்துப்பூர்வமான புகார் வரும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

;