tamilnadu

கொரோனா கால பயணப்படி வழங்க கூட்டுறவு பணியாளர்கள் கோரிக்கை

திருப்பூர், நவ. 8- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணி யாளர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்ட நிர் வாகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் கே.மகேந்திரன் தலைமையில் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ படி நியாயவிலைகடை பணியாளர்களுக்கு ரூபாய் 300 வழங்க வேண்டும், கொரோனா கால பயணப்படி வழங்கப்படாத ஊழியர் களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நவம்பர் 26ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்து  சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் விளக்கி பேசினர். மாவட்ட செயலாளர் பி.கௌத மன், பொருளாளர் கருப்புசாமி, துணை தலைவர் சிவக்குமார், துணை செயலாளர் கள் பி.சுரேஷ், முருகன் உள்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.