திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வயலூர் பகுதியில் ஞாயிறன்று கிராமப்புற மக்கள் கூட்டு வண்டி கட்டிக் கொண்டு வரிசையாக அணிவகுத்து பழனி கோயிலுக்குச் சென்ற காட்சி. அண்மைக் காலம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த வட்டார கோயில் திருவிழாக்களுக்கும், குலதெய்வ வழிபாட்டுக்கும் செல்லும்போது, இதுபோல் மாடு பூட்டிய கூட்டு வண்டிகளில் குடும்பத்தினர், உறவினர்கள் ஒன்றாக செல்வது வழமையாக இருந்தது. ஆனால் இன்றோ அது அருகி வரும் அரிய காட்சியாக மாறிவிட்டது.