tamilnadu

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்திடுக சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தல்

அவிநாசி, ஜூன் 11- அவிநாசி அருகே கணியம்பூண்டி, கவுண்டம்பாளையம் கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி வலியுறுத்தியுள் ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழுக்கூட் டம்  ஒன்றியக் குழுத் தலைவர் அ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர் ஹரிஹரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சாந்தி லட் சுமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சிவகாமி சுப்பிரமணியம், ஒன்றியத் துணைத் தலைவர் பிரசாந்த் குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்  முத்துசாமி பேசுகை யில், வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பா லத்தின் மீது உள்ள 22 மின் விளக்குகள் பழு தடைந்துள்ளது. கணியாம் பூண்டிக்கு மாதந் தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால், 4 லட்சம் லிட்டர் மட் டுமே விநியோகிக்கப்படுகிறது. இதே போல், புதுப்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் தினசரி வழங்க  வேண்டும். ஆனால், கடந்த சில தினங்களாக தண்ணீர் விநியோகமே நிறுத்தப்பட்டுள் ளது.

மேலும், வஞ்சிபாளையம் அரசு மேல்நி லைப்பள்ளி சுற்றுச்சுவரை பலப்படுத்த வைத்திருந்த மண்ணை நெடுஞ்சாலைத்து றையினர் எடுத்துச்சென்றுள்ளனர்.  இத னால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழும் சூழ் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித் தார்.