tamilnadu

ஏழாவது ஊதியக்குழுவின்படி ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கிடுக  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

 அவிநாசி ஆக.7 திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் அவிநாசி அமைப்புக் குழு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10.5.2000 ஆண்டு பின்பு வேலையில் சேர்ந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு படி ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு சம்ப ளத்தை 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் வழங்க வேண் டும். ஊழியர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள், அரசு அடையாள அட்டை, 2006 வருடம் பின்பு பணியில் சேர்ந்து ஊழியர்களுக்கு வருகைப் பதிவேடு புத்தகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மகா சபை யில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவிநாசி  பகுதி கன்வீனராக பி. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் கலந்து கொண்டார்.