உடுமலை, ஜுலை 15- இலவச மடிக்கணினி வழங் கக்கோரி உடுமலையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை கல்வி மாவட் டத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள் ளிகள் உள்ளன. ஆண்டுதோறும் இப்பள்ளிகளில் நான்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல்நிலைக்கல்வி படித்து முடிக்கின்றனர். ஆண்டுதோறும் பிளஸ் 2 முடித்துச் செல்லும் மாண வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உயர்கல்விக்கு பயன் படுத்திக் கொள்ளும் வகையில் இலவசமாக ‘மடிக்கணினி’ வழங் கப்பட்டு வருகின்றன. இந்நிலை யில் கடந்த 2017 - 18 மற்றும் 2018 - 19 ஆகிய ஆண்டுகளில் படித்த பிளஸ்2 மாணவர்களுக்கு தற்போது வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால், நடப்பு கல்வியாண்டில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி அவசரகதி யில் நடந்து வருகின்றன. இத னால் கடந்த 2017-18, 2018 -19ம் ஆண்டு படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த கல்வி யாண்டுகளில் மேல்நிலைக் கல்வி பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்கக்கோரி திங்க ளன்று உடுமலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட் டது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று 15 நாட்க ளுக்குள் மடிக்கணினி வழங்க நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப் படாத நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாண வர்களுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டு வருகிறது. ஆகவே, நிலுவை யில் உள்ள மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ஆவேச மாக கூறினர். மேலும் அதிகாரிகள் கூறியபடி 15நாட்களில் தங்க ளுக்கு மடிக்கணினி வழங்க நட வடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடு பட போவதாகவும் தெரிவித்தனர்.