திருப்பூர், செப். 14 - திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநக ராட்சி துவக்கப் பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலாவுக்கு பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அருள் தலைமை வகித் தார். பெற்றோர் சார்பில் பூர்ணேஷ்வரன் வரவேற்றார். எஸ்.டீ எக்ஸ்போர்ட்ஸ் மேலாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பின ரும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரு மான பட்டுலிங்கம் தலைமையாசிரியருக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலை வர் பி.ஆர்.கணேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கனக ராஜா, ஏ.ஹெச்.டி. ஜோசப் மற்றும் பள்ளி யின் பெற்றோர்கள் வாழ்த்துரை வழங்கி னர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் செ.நடேசன் சிறப்புரை வழங்கி தலைமை ஆசிரியரை வாழ்த்தினார். இறுதியில் தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா ஏற்புரை நிகழ்த்தினார். பூலுவபட்டி அரசுப் பள்ளி யில் பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு அண்மைக் காலத்தில் மிகச் சிறந்த பள்ளியாக முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவின் நிறைவாக ஆசிரியர் மணிகண்ட பிரபு நன்றி கூறி னார்.