திருப்பூர், டிச. 16 - பொங்கலூரில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட் சித் தேர்தல் தொடர்பான ஊழி யர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொங்கலூர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர் நாட்ராயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்த லில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் கள் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பது தொடர்பாக சிறப்பு ரையாற்றினார். கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், பொங்கலூர் ஒன்றியச் செய லாளர் சிவசாமி ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றி னர். பொங்கலூர் ஊராட்சி ஒன்றி யக் கவுன்சில் 6ஆவது வார்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி வேட்பாளராகப் போட்டியி டுகிறார். அதேபோல் தெற்கு அவி நாசிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செங்கொடி சேகர் வேட்பாளராகப் போட்டியிடுகி றார். இருவரையும் வெற்றி பெறச் செய்வதற்கு திட்டமிட்ட முறை யில் தேர்தல் பணி ஆற்றுவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.