திருப்பூர், அக். 21- திருப்பூர் அருகே அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டி பகுதியில் மதுபானக் கடை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஊராட்சி ஒன்றிய 19ஆவது வார்டு கவுன்சிலர் பி.முத்து சாமி தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரி டம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டம், அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டி ஊராட்சிக்குட் பட்ட ஆத்துமேடு பகுதியில் நொய்யல் ஆறு, கௌசிகா நதி இவற்றுக்கு மத்தியில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் அதிகமுள்ள இப்பகுதியில் மணிவாசகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில், மதுபானக் கடை அமைக்க ஏற்பாடு செய்து வருவ தாகத் தெரிகிறது.
அப்பகுதியில் மதுபானக் கடை அமைந்தால் சமூக விரோ திகள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். ஏற்கெனவே மதுபானக் கடை அமைப்பதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, ஆத்துமேடு பகுதியில் மதுபானக் கடை அமைப் பதைத் தடுத்து நிறுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.