tamilnadu

சத்துணவு ஊழியர் சங்க கோரிக்கை பிரச்சார கூட்டம்

திருப்பூர், நவ. 1 – வெள்ளகோவிலில் சத்துணவு ஊழியர் சங்கத் தின் கோரிக்கைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றி யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க பிரச் சார விளக்கக் கூட்டம் ஒன்றியத் தலைவா் கவிதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ராஜேஸ்வரி தொடக்கவுரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.பழனி சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அப்போது, காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வு ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் நவம்பர்  12ஆம் தேதியன்று தமி ழக முதல்வரின் கவன ஈா்ப்புப் பேரணி நடத்து வது, நவ. 26ல் மாவட்டத் தலைநகரில் மறி யல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.  பிரச்சார விளக்கக் கூட்டத்தில் சுமார் 40 ஊழியர் கள் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்பட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளா் ஆர்.ராமசாமி நிறைவுரை ஆற் றினார். ஒன்றிய பொருளாளா் ஆா்.ரதி நன்றி கூறி னார்.