திருப்பூர், அக். 29- ஐடிபிஎல் திட்டத்துக்கு நிலம் எடுப்பது தொடர்பாக மொடக் குறிச்சியில் அறிவிக்கப்பட்ட விசா ரணை விவசாயிகள் போராட்டத் தால் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல் காங்கயத்தில் நவம்பர் முதல் வாரம் நடத்துவதாக அறிவிக்கப் பட்ட நில எடுப்பு விசாரணையும், விவசாயிகள் எதிர்ப்புக் காரணமாக, மாவட்ட நிர்வாகத்தால் ரத்து செய் யப்பட்டது. பாரத் பெட்ரோலியத்தின் இரு கூர் - தேவனகொந்தி எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப் படுத்த, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நவம்பர் 3, 4, 6 ஆகிய தேதியன்று நில எடுப்பிற் கான விசாரணை அழைப்பாணை படியூர், சிவன்மலை, மரவபாளை யம் ஆகிய கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப் படும் விவசாயிகள் கூட்டமைப்பு இது தொடர்பாக விவாதித்தது.
கெயில் திட்டத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வகுத்த கொள்கைப்படி இத்திட்டத்திலும் சாலையோரமாக அமைக்கக் கோரி ஆறு மாவட்டங்களில் கடந்த செப். 15 முதல் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. ஆறு மாவட்டங்க ளிலும் அரசு நிர்வாகத்தினர் கூட்ட மைப்பு நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ஐடி பிஎல் திட்டத்தில் அரசிடம் இருந்து இறுதி முடிவு வரும் வரை திட்ட வேலைகள் எதுவும் நடைபெறாது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கோட்டாட்சியர் கூட்டமைப்பு நிர் வாகிகளோடு ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில், கடந்த அக்.27 ஆம் தேதியன்று மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில், மேற் படி ஒப்பந்தத்துக்கு மாறாக, நில எடுப்பு விசாரணை தொடங்கப் பட்டது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், ஈரோடு எம்.பி. கணே சமூர்த்தி அங்கு திரண்டு போராட் டம் நடத்தி அந்த விசாரணை நட வடிக்கையை கைவிடச் செய்தது டன், எழுத்துப்பூர்வமாக ரத்து அறி விப்பும் வெளியிடச் செய்தனர்.
மேலும், மொடக்குறிச்சியில் விசார ணைக்கு அழைத்த ஐடிபிஎல் அதிகாரி புஷ்பா காங்கயத்தில் விசாரணைக்கு அழைப்பாணை கொடுத்துள்ளார். மொடக்குறிச்சி யைப் போல் காங்கயத்திலும் விவ சாயிகள் அணி திரண்டு இந்த நில எடுப்பு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதென கூட்டமைப்பி னர் முடிவு செய்துள்ளனர். அத்துடன் ஈரோடு எம்.பி. கணே சமூர்த்தி, நில எடுப்பு அதிகாரி புஷ் பாவிடம், மொடக்குறிச்சி போல் காங்கயத்திலும் நிகழ்வுகள் நடை பெற வழிவகுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார். இதைய டுத்து அந்த அதிகாரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். இதன் அடிப்படையில் காங்கயத் தில் மூன்று நாட்கள் நடத்த இருந்த நில எடுப்பு விசாரணை ரத்து செய் யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேயம் வட்டாட்சி யர் அலுவலக செய்திப் பலகையி லும் இந்த தகவல் அறிக்கை ஒட்டப் பட்டது.