அவிநாசி, செப்.18- திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் அருகே யுள்ள ராயர்பாளையத்தை சேர்ந்தவர் கே.வேலுசாமி (21). இவர் அப்பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவரைக் காதலித்து வந்தார். கடந்த வாரம் திருமண ஆசை வார்த்தை கூறி அச்சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் சிறுமி மீட்கப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி, போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலுசாமியை செவ்வா யன்று மாலை கைது செய்தனர்.