tamilnadu

img

மாணவ, மாணவிகளின் சிறகுகள் விரியட்டும் புத்தக திருவிழாவில் கவிதை நூல் வெளியீடு

உடுமலை, ஆக. 10- உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டம் சார் பில் புத்தக திருவிழாவில் கவிதை நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எழுதிய சிறகு கள் விரியட்டும் என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் (எண் 2ல்) இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாணவ,  மாணவியர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டது. நிகழ்ச்சிக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் முனைவர் ஜே.மஞ்சுளா தேவி தலைமை வகித்து புதுக்கவிதைகள் எழுதிய கவி ஞர்களின்  கவிதை தொகுப்புக்குத் தான் முன்னுரை எழுதியது மகிழ்ச்சி அளிக்கி றது எனக் கூறினார். வித்யா சாகர் கல் லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ஜெயவீரசிக்குமார் வரவேற்றார்.  உடு மலை அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் திருமாவளவன் முன் னிலை வகித்தார்.வழக்கறிஞர் சத்திய வாணி, வழக்கறிஞர் சாதிக் பாட்சா ஆகியோர் கவிஞர்களின் கவிதைகள் குறித்து வாழ்த்துரை வழங்கினர். ஆடிட்டர் வைரமுத்து கவிதை நூலை வெளியிட நூலகவாசகர்வட்ட ஆலோ சகர் செல்வி கேஸ் எம்.பி.அய்யப்பன் பெற்றுக்கொண்டார். நூலகர் வீ.கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவாக வித்யாசாகர் கல்லூரி  தமிழ் துறை உதவி பேராசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.