tamilnadu

பின்னலாடை ஏற்றுமதி 60 சதவிகிதம் வீழ்ச்சி : 2021 மார்ச் வரை கடன் தவணை செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க கோரிக்கை

திருப்பூர், ஆக. 2 – இந்தியப் பின்னலாடை ஏற்று மதி கடந்த நிதியாண்டு முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த நிதியாண்டில் 60.54 சதவி கிதத்திற்கு வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதியாளர்கள் பெற்ற கட னுக்குத் தவணை செலுத்துவதை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கும்படி திருப்பூர் ஏற் றுமதியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றும தியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் பின்ன லாடைத் தொழில் துறையினரின் நிதி நிலைமை மேம்படாமல் உள்ளது. அவர்கள் கடனையும், தவணை யையும் செலுத்த முடியாமல் இருப்பதால் கடன் தவணை செலுத்த வேண்டிய காலத்தை மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி ஒத்திவைக்கும்படி அறிவு றுத்த வேண்டும். 2020 – 21 ஆம் நிதியாண்டு தொடங்கிய முதல் மூன்று மாத காலத்தில் (ஏப்ரல் – ஜூன்) அகில இந்தியப் பின்னலாடை ஏற்றுமதிய ளவு வெறும் ரூ.5 ஆயிரத்து 355 கோடியாக பதிவாகியுள்ளது.

முந்தைய நிதியாண்டில் முதல் காலாண்டில் இது ரூ.13 ஆயிரத்து 570 கோடியாகும். அதாவது மொத்தம் 60.54 சதவிகிதம் ஏற்று மதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இப்போதைய பின்னலாடை ஏற்று மதி நிறுவனங்களின் நிலையை தெளிவாகக் காட்டுவதாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கடன் தவணை செலுத்தும் காலத்தை ஒத்திவைப் பது பின்னலாடை நிறுவனங்க ளுக்கும், வங்கிகளுக்கும் மட்டு மின்றி நாட்டின் பொருளாதாரம் மீள்வதற்கும் உதவும். இத்துடன் சமீபத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவ னங்களுக்கான மூலதன, விற்று வரவு வரம்பு அளவை மத்திய அரசு மாற்றி அமைத்திருக்கிறது. இதன் படி திருப்பூரில் கணிசமான ஏற்று மதி நிறுவனங்கள், நடுத்தர ஏற்று மதி நிறுவனங்கள் என்ற பட்டிய லில் இடம் பெறும். கொரோனா தொற்று காலத்தில் ரூ.100 கோடி முதலீடு உள்ள நிறுவ னங்கள் ஏற்கனவே ரூ.25 கோடி வரை கடன் பெற்றிருந்தாலும் அவர் களுக்கு அதிகபட்சம் ரூ.25 கோடி வரை அவசரக் காலக் கடன் தரப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பல நிறுவனங்கள் இந்த வரம்புக்குள் இடம் பெறும். ஆனால் அவற்றின் முந்தைய கடன் அளவு ரூ.25 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், வங்கி களில் அவசர காலக் கடன் பெற முடியாத நிலை உள்ளது. எனவே நிபந்தனையைத் தளர்த்தி இந்த நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களும் அவற்றின் முதலீட்டு அளவில் 20 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 கோடி அவசரக் கடன் பெற வும் உதவி செய்ய வேண்டும். தற்போது தொழில் சூழல் மந் தமான நிலையில் இருப்பதுடன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடிய ஆர்டர்களும் மிகவும் குறைவாகவே இருப்ப தால், நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு நடைமுறைச் செல வுக்கும் இந்த கடன் மிகவும் தேவை யாகும். எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.