tamilnadu

img

தேர்தல் விதி மீறி கருவலூரில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கல்

அவிநாசி, டிச. 24- அவிநாசி அருகே கருவலூரில் தேர்தல் விதி நடத்தையை மீறி, வீட் டுக் குடிநீர் குழாய் இûணைப்பு வழங் கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியத்தில் டிச.30ஆம் தேதி உள் ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு வேட்டையில் அர சியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். வாக்குப் பதிவிற்கு 4 நாட்களே உள்ள நிலையில் கருவலூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் தேர்தல் விதி நடத்தையை மீறி, திடீரென பல வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக, குழி தோண்டப் பட்டு குழாய் இணைக்கும் பணி செவ் ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையறிந்த பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி குடி நீர் குழாய் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தி னரிடம் கேட்ட போது, வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புக்காக குழாய் தோண்டப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.