tamilnadu

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், அக்.5- திருப்பூரில் தனது வீட்டை ஆக்கிரமித்து வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத் துக்கு உட்பட்ட அவிநாசி பாளையம் பகுதியை சேர்ந்த வர் கோபிராஜ். இவர் தனது மகள் வளர்மதி மற்றும் பேத்தி நிர்மலாதேவியுடன் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோபி ராஜ் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் அவர் வசித்து வந்த  வீட்டை அதே பகுதி யைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் வளர்மதி மற்றும் நிர்மலாதேவி ஆகியோரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு ஆக்கிர மித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் கள் மீண்டும் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவதாக ஆட்களை வைத்தும் மிரட்டுகிறார் எனக்கூறி வளர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த வளர்மதி மற்றும் மகள் நிர்மலா தேவி ஆகிய இருவரும் தங்களை ஏமாற்றி வீட்டை ஆக்கி ரமித்த நபர் மீது நடவடிக்கை வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கு ளிக்க முயற்சி செய்தனர்.  உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென் றனர். இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தாய், மகள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகு தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.