திருப்பூர், மே 21 - மாநிலம் முழுவதும் பசியால் வாடி வரும் கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு இரண்டாவது தவணையாக ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு வின் கூட்டம் மாநிலத் தலைவர் ஆர். சிங்காரவேலு தலைமையில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செய லாளர் டி.குமார், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:- கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி துவங்கிய கொரோனா ஊரடங்கு 55 நாட்களுக்கு மேலாகி உள்ளது.
தமிழக முதலமைச்சர் கட்டுமான தொழிலாளி களுக்கும், இதர அமைப்புசாரா தொழி லாளிகளுக்கும் முதல் தவணையாக ஆயிரம் ரூபாயும், இரண்டாவது தவ ணையாக 1000 ரூபாயும், மேலும் கட்டு மான தொழிலாளிகள், ஓட்டுநர்க ளுக்கு பொதுவிநியோக முறை திட்டத்தின்கீழ் உணவு பொருட்கள் வழங்குவது என அறிவிப்பு செய்தார்கள். அன்றாடம் வேலை செய்தால்தான் உணவு என்கிற நிலையில் வாழ்கிற சாதாரண தொழிலாளிகளின் வாழ்க்கைத் தேவைக்கு, பேரிடர் கால மான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலை யில், அறிவிக்கப்பட்ட நிவாரணம் இன்னும் போய் சேரவில்லை என்பது வேதனையளிக்கிறது. மாவட்டங்களில் சமூக பாது காப்புத் திட்ட உதவி ஆணையர்கள் போதுமான கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் தமிழகம் முழுவ தும் லட்சக்கணக்கான தொழிலாளி களுக்கு நிவாரணம் சென்றடைய வில்லை என்பதை அரசின் கவ னத்திற்கு கொண்டு வருகிறோம்.
பசியால் வாடும் தொழிலாளி களுக்கு உரிய காலத்தில் நிவாரண மும், உணவுப்பொருளும் வழங்க வில்லை என்றால் பயனற்றுப் போகும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும் உரிய காலத்தில் நிவார ணங்களை கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவ தும் கட்டுமானம் அமைப்புசாரா தொழி லாளர் கள் நலவாரியத்தில் பதிவு செய்திருப்பவர்கள், அட்டை வைத்தி ருக்கிறவர்கள் என அனைத்து தொழி லாளர் களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். புதுப்பித்தல் காரணத்தை காட்டி நிவாரணம் வழங்காமல் இருப்பதும், அந்த தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் இருப்ப தும் நியாயமற்ற செயலாகும். எனவே உடனடியாக நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்க ளுக்கும் உடனடியாக உதவிகள், நிவா ரணம் கிடைக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்கள் சொல்லொண்ணா துன்ப துயரங்களில் ஆட்பட்டு இருக்கிறார்கள். பசியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்தஊருக்கு நடந்தே செல்கிற கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சி யர்கள் கவனம் செலுத்தவில்லை. அரசுத்துறையும் கவனம் செலுத்த வில்லை. மாறாக பல பகுதிகளிலும் அவர்க ளைத் தடியடி நடத்தி விரட்டியடிக்கும் கொடுமை நடத்தப்படுகிறது. மாநில அரசாங்கம் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்க ளுக்கு அனுப்புவதற்கு ரயில் மூல மாகவோ இதர போக்குவரத்து வாக னங்கள் மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அரசாங்கம் இந்த பிரச்ச னைகளில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கட்டுமானத் தொழி லாளர் சம்மேளனம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.