tamilnadu

img

மூன்றாவது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: கண்டுகொள்ளாத திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

திருப்பூர், அக். 30 - நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக் கும் திட்டப் பணியைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்தி மூன்றுவாது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக் கும் திட்டப் பணியைத் தொடங்கக் கூடாது, அதற்கு வழங்கியுள்ள முன் நுழைவு அனுமதியை மாவட்ட ஆட்சி யர் ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்காத சுஸ்லான் தனியார் கார்ப்பரேட் நிறு வனத்திற்கு உயர்மின் கோபுரம் அமைக்க கொடுக்கப்பட்டுள்ள  முன் நுழைவு அனுமதியை ரத்து செய்யப் பட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல் வேறு  வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத் தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து கொண் டிருந்தபோதும், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவோ, முன் அனு மதியை நிறுத்தி வைக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சி யம் காட்டி வருகிறது.

வெள்ளியன்று ஊத்துக்குளி மையத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, திமுக ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பி. ஈஸ்வரமூர்த்தி, திமுக ஊத்துக்குளி மத்திய ஒன்றிய செயலாளர் என்.கொண்டசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி, தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் மு.ஈசன், மாநில தலைவர் ஆர்.சண்முக சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட நிர்வாகம் உரிய பதில் அளிக் காத வரை இந்த போராட்டம் தொட ரும் என்று உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.