அவிநாசி அடுத்த கருமாபாளையத்தில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் தூய்மைப் பேரணி நடைபெற்றது. முன்னதாக சாலையின் இருபுறமும் இருந்த புதர்களை அகற்றினர். பொது கழிவறையை சுத்தம் செய்தனர். நமது கிராமம் தூய்மையான கிராமம், பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாற்றுவோம் என வலியுறுத்தினர்.