திருப்பூர், ஜூன் 12 – திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தின் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தை களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என அப்பள்ளி நிர் வாகம் நிர்ப்பந்தம் செலுத்தி வருவ தாக பெற்றோர் குற்றஞ்சாட்டி யுள்ளனர். குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை களின் பெற்றோர் பி.சுரேஷ்குமார் மற்றும் ரம்யா ஆகியோர் இது குறித்து ஊத்துக்குளி வட்டாரக் கல்வி அலுவலரிடம் புதன்கிழமை புகார் கடிதம் கொடுத்துள்ளனர். இக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது: குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எங்கள் குழந்தை நந்தனா 5ஆம் வகுப்பும், சௌம்யா 4ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதேபோல் பல குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டப்படி இப்பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். ஆனால் இப் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வா கத்தினர் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு புறம்பாக ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணமாக பெருந்தொகை கட்ட வேண்டு மென்று வலியுறுத்துகின்றனர். ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக கேட்கும் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என தெரிவித்து வரு கிறோம். இந்த ஆண்டு பள்ளி துவங்கிய பின்பு எஸ்.ஆர்.நந்தனா 5ஆம் வகுப்பிற்கு கல்விக் கட்டணமாக ரூ.32,950-ல் அரசு வழங்கும் ரூ.7480 கழித்து ரூ.25,470 கட்ட வேண்டுமென்றும், அதேபோல் 4ஆம் வகுப்பு படிக்கும் சௌம்யா விற்கு கல்விக் கட்டணமாக ரூ.31,000த்தில் அரசு வழங்கும் கல்விக் கட்டணம் ரூ.7480 கழித்து ரூ.23,520 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த ஆண்டு கல்விக்கட்டண நிலுவைத் தொகை யாக நந்தனா ரூ.10,230, சௌம்யா விற்கு ரூ.9,230 செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கின்றனர். இது போக புத்தகக் கட்டணம் ரூ.5920 செலுத்த வேண்டுமென பள்ளி முதல்வர் கூறுகிறார். இது தொடர்பாக நாங்கள் பள்ளி முதல் வரை அணுகி புத்தகக் கட்டணம் மட்டும் செலுத்துகிறோம் என்று தெரிவித்ததை ஏற்காமல், புத்த கமும் வழங்காமல் எங்கள் இரு குழந் தைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்ந்த மற்ற குழந்தை களையும் பள்ளி முதல்வர் பார பட்சமாக நடத்தி வருகிறார். இத னால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பயப்பட்டு அழுது கொண்டே செல்கிறார்கள். கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோராகிய நாங்கள் குறைந்த வருவாய் பிரி வினர் ஆவோம். எங்களை அலைக் கழித்து மன உளைச்சல் ஏற்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான கட்ட ணத்தை வசூலித்திட பள்ளி முதல்வர் தொடர்ந்து முயற்சி செய் கிறார். இதனால் எங்கள் குழந்தை களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. கல்வி உரிமைச் சட்டப்படி எங்களுக்குக் கிடைக் கக்கூடிய உரிமைகளைப் பள்ளி முதல்வரும், நிர்வாகமும் திட்ட மிட்டுப் பறிக்கக்கூடிய நிலை உள்ளது. எனவே கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு கல்வி உரிமைச் சட்டத்துக்குப் புறம்பாக கல்விக் கட்டணம் செலுத்த கட்டா யப்படுத்தும் குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும், குழந் தைகளுக்கான புத்தகக் கட்ட ணத்தைப் பெற்றுக் கொண்டு புத் தகம் வழங்கவும், கல்வி உரிமைச் சட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் கல்வி நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வா கத்திடம் பேசுவதற்காக பெற்றோர் சார்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் உள்ளிட்ட நிர் வாகிகள் முயற்சித்தபோது, பள்ளி முதல்வர் பொறுப்பற்ற முறையில் கல்வி உரிமைச் சட்டத்தை அலட் சியப்படுத்தும் விதத்திலும் நடந்து கொண்டார். கல்வி உரிமைச் சட்டப் படி உரிய நடவடிக்கை மேற் கொண்டு குழந்தைகள் படிப்பைத் தொடர ஊத்துக்குளி வட்டார கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வலி யுறுத்துவதாக ஆர்.குமார் கூறி னார்.