திருப்பூர், அக். 17 - இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் நூற்றாண்டு விழா கொடி யேற்றம் திருப்பூரில் வியாழக் கிழமை நடைபெற்றது. திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர் பங்கேற் றனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் செங்கொடி ஏற்றி இந்திய கம்யூனிச இயக் கத்தின் நூற்றாண்டு விழா உற்சா கமாக கொண்டாடப்பட்டது.