tamilnadu

img

5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்க உடுமலையில் தபெதிக ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜன. 30-  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வலி யுறுத்தி தந்தை பெரியார் திராவி டர் கழகம் சார்பில் புதனன்று மடத் துக்குளம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடத்தூர் நா.ப.கதிரவன் தலைமை வகித்தார்.கழக வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன், அருந்ததியர் பாதுகாப்புப்படை ஒருங்கிணைப்பாளர் வழக்குரை ஞர் ம.மனோகரன், திராவிடர் தமிழர் கட்சி மாநில பொருளாளர் க.தங்கவேல், வி.சி.க. துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு மையம் மாநில துணைச் செயலாளர் கு.விடுதலைமணி ஆகியோர் கண் டன உரையாற்றினர். தபெதிக திருப்பூர் மாவட்டச் செயலாளர் சு.சிவசங்கர், மடத்துக்குளம் ஒன்றி யத் தலைவர் மா.மோகன்குமார், மடத்துக்குளம் ஒன்றியச் செயலா ளர் கு.மயில்சாமி, உடுமலை நகரத் தலைவர் யாழ் நடராசன், உடுமலை நகரச் செயலாளர் ஜே.கே.ரமேஷ், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் கோ.விசுவநாதன், அப்பாஸ், திரு மூர்த்தி, விசிக மடத்துக்குளம் ஒன்றி யச் செயலாளர் பழ.இராசசேகரன், மனித நேய மக்கள் கட்சி மடத்துக் குளம் ஒன்றியப் பொருளாளர் அ.சுல் தான், மக்கள் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ப.ரவிச்சந்தி ரன், ஆதித்தமிழர் பேரவை மடத்துக் குளம் ஒன்றியச் செயலாளர் ப.ஆறு முகம், கடத்தூர் ஆ.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;