அவிநாசி, அக். 26- திருப்பூர், அவிநாசியில் கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தீய ணைப்புத் துறை சார்பில் ஞாயிறன்று நடை பெற்றது. கொரோனா நோய்த்தொற்றானது உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியுள் ளது. இந்நிலையில், இந்நோய் குறித்து பல் வேறு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவிநாசி தீயணைப்புத்துறை சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில், வெளியே சென்றுவிட்டு வந்தால் உடலை சுத்தம் செய்ய வேண்டும். தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல கூடாது.
முகத்தை முகக்கவசத்தால் மூட வேண்டும். வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க குறைந்தது மற்றவர்களிடம் இருந்து 3 அடி தள்ளி இருக்க வேண்டும். கூட்ட மாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண் டும். விலங்குகளுடன் விளையாடுவது, சர ணாலயங்களுக்கு செல்வது உள்ளிட்டவை களை சில நாள்களுக்கு தவிர்க்க வேண்டும். காய்ச்சல், தொடர்ந்து இருமல், தும்மல் இருந்தால் வெளியே செல்லாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டு வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்க ளுக்கு விநியோகிக்கப்பட்டது.