திருப்பூர், நவ.13 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா, ஊதியூர் பகுதியில் அருந்ததியர் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக தனியார் வெடி மருந்து தொழிற்சாலை மீது காங்கேயம் வட்டாட்சியரிடம் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது. ஊதியூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (58) என்பவர் காங்கேயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: ஊதியூர் கிராமம், அருந்ததியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நான், இப் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு அரசு சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இரண் டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில், எனது மேற்கண்ட நிலத்துக்கு அருகே செயல்பட்டு வரும் ராஜா வெடிமருந்து தொழிற்சாலை நிறுவ னத்தினர் எனது நிலத்தில் 25 சென்ட் நிலப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்ற னர். எனது நிலத்தை அபகரிக்கும் நோக் கத்தோடு, அத்துமீறி எனது நிலத்தில் 20 எண்ணிக்கையில் அளவுக் கற்களையும் நட்டு வைத்துள்ளனர். இது குறித்து வெடி மருந்து தொழிற்சாலை நிறுவனத்திடம் கேட்டால், என்னை மிரட்டுகின்றனர். எனவே, மேற்கண்ட எனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவ டிக்கை எடுப்பதோடு, அவர்களிடம் இருந்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாது காப்பு வழங்க வேண்டுமென அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரிடம் மனு கொடுத்தபோது ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் மற் றும் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் உடனி ருந்தனர்.