tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

திருப்பூர், ஜன. 21 - திருப்பூர் மாவட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பல்வேறு கல்விநிறுவனங்களில் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். ஊத்துக்குளி, பல்லடம் மற்றும் அவிநாசி பாளையம் ஏஜி கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர் சங்கம் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் பாலமுரளி உள்பட சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம், தேசிய  குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என எழுதப்பட்ட பதாகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத் துடன் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

;