tamilnadu

img

பிஎஸ்என்எல்-ஐ புதுப்பிக்கத் தடையாக நிர்வாகம்! திருப்பூர், பல்லடத்தில் ஆவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 1 – பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஊதிய நிறுத்தம், ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஊதியம் செலுத்தாதது, மின் கட்டண, வாடகை செலுத்தாதது, மூல தனச் செலவினத்திற்கு முழுமையான தடை என பிஎஸ்என்எல்  நிறுவனத் தைப் புதுப்பிப்பதற்குத் தடையாக நிர்வாகம் செயல்படுவதைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி யன், அதிகாரிகள் சங்கத் தலைவர் கேசவன், பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன் ஆகியோர் நிர்வாகத்தைக் கண்டித் தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரையாற்றினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்கள், ஒப் பந்த தொழிலாளர்கள் உள்பட திர ளானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.