tamilnadu

திருப்பூரில் 95 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

திருப்பூர், ஜூலை 2- திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகா ரிகள் நடத்திய திடீர் சோதனையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 95 கிலோ கலப்பட டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயனின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி, கேசவராஜ், சதீஸ், வியோ பால முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் சந் திரபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் புத னன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப் போது குடோனில் சாயமேற்றப்பட்ட கலப்பட டீத் தூள் 95 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நாச்சி முத்து (54) என்பவர் குடோனை வாடகைக்கு எடுத்து டீத்தூளை இருப்பு வைத்து பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கலப்படம் செய்யப்பட்ட 95 கிலோ டீத்தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட 95 கிலோ டீத்தூளில் இருந்து உணவு மாதிரி சேக ரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் முடிவில் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், இதுபோன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.