ஊத்துக்குளியில் 6 ஆவது புத்தகத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி மாலை துவங்கி நான்கு நாட்களாக நடைபெற்றது. சனியன்று மாலையுடன் இக்கண்காட்சி நிறைவு பெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் 10 மற்றும் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் 27 பேருக்கு ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.