திருப்பூர், ஆக. 24 – திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரும்படி பாதிக் கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். திருப்பூர் அம்மாபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் அப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக ஏலச்சீட்டு, பள்ளி சீட்டு, பண்டு சீட்டு மற்றும் தீபாவளிச் சீட்டுகள் என பலவிதமான சீட்டுகள் நடத்தி வற் துள்ளார். இதனடிப்படையில் அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரண மாக அப்பகுதியைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் அவரிடம் மாதத் தவணையில் பணம் கட்டி சீட்டு சேர்ந்துள்ளனர்.
தவணைத் தொகை களை சரியாக செலுத்தி வந்த சூழ்நிலையில், சீட்டு முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் பணம் தராமல் கோபால்சாமி இழுத்தடித்து வந்த தாகத் தெரிகிறது. இதுகுறித்து அவரது வீட்டிற்கு சீட்டு கட்டியவர்கள் நேரில் சென்ற போது அவர் தலைமறைவாகி யது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கண்டுபிடித்து உடனடியாக தங்கள் பணத்தை மீட்டுத்தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் திங்களன்று புகார் மனு அளித்த னர். அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை கோபால் சாமியிடம் சீட்டு சேர்ந் துள்ளதாகவும், ரூ.2 கோடி வரை மோசடி நடந்திருக்கும் எனவும் பாதிக் கப்பட்டோர் தெரிவித்தனர்.