tamilnadu

img

பொதுமக்களின் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர்

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் நேற்றும் வாணியம்பாடி காய்கறி சந்தையில்  நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ்  ஆய்வு நடத்தினார்.  அப்போது, நடைபாதையில் காய்கறி பழங்களை விற்கும் நடைபாதை வியாபாரிகள்  ஊரடங்கு விதிகளை மீறியதாக காய்கறி பழங்களை தரையில்  தூக்கி வீசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலனது. ஊரடங்கில் கடும் சிரமங்களுக்கு இடையே வாழ்வாதாரத்திற்காக கடை வைத்திருப்பவர்களிடம் இதுபோன்று ஆணையர்  சிசில் தாமசின்  நடந்து கொண்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. 
தொடர்ந்து சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத் வேறு வழியில்லாமல் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், தான் செய்த தவறுக்கு  வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் கீழே வீசிய பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார்.