tamilnadu

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

திருநெல்வேலி, ஏப்.21- நெல்லை மாவட்டத்தில் பரவலாகமழை பெய்தது. இருந்த போதிலும் பாபநாசம் அணை நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாகநெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சிவகிரிபகுதியில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளன நெல்லை, பாளையங் கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. சுமார் 30 நிமிடம்மழை நீடித்தது. திடீரென்று கோடை மழை பெய்ததால் இதமான சூழ்நிலைநிலவியது.தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டிவதைத்தது. அனல் காற்று வீசியது.மாலை 4 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 4.45 மணிக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்தது. இந்த மழை 5.05 மணி வரைபெய்தது. இதேபோல் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம், தெற்குபனவடலி, ஆயாள்பட்டி, ஆராய்ச்சிபட்டி, திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் மதியம் சுமார் ஙூ மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் செங்கோட்டையில் சனியன்று மாலை இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம்பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோடைகாலம் என்பதால் பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் பெருமளவு வறண்டு விட்டன. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் வறண்டுகாணப்படுகிறது.

;