மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
திருநெல்வேலி, செப்.15- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன் கூறியதாவது: மாநிலம் முழுவதும் தனியார் சர்க்கரை அலைகள் கரும்பு விவசாயிகள் எப்.ஆர்.சி பணம் ரூ.450கோடி பாக்கி வைத்துள்ளது ஜூலை 16ல் சென்னையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மாநில தொழில் துறை அமைச்சர் ஆக இறுதிக்குள் எப்.ஆர்.சி பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை கரும்பு விவசாயிகளுக்கு அந்த பணம் வழங்கப்படவில்லை. ஆலையில் போராடும் போது நவம்பரில் தான் பணம் தருவோம் என தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலை யிட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வரி வருவாய் சட்டத்தின் கீழ் தரணி சர்க்கரை ஆலையில் பணத்தை பெற்று விவசாயிகளுக்கு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
திருநெல்வேலி, செப்.15- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 2 மாதங்க ளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வந்த பெண் சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி ராமர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான ஆடு ஒன்றை இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று தூக்கி செல்லும் காட்சி அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா வில் பதிவானது. இதனை தொடர்ந்து ராமர் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, சிறுத்தையை பிடிப்பதற்காக அண்ணாநகர் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கூண்டுகளை வைத்து சென்றனர். சுமார் 2 மாதங்களுக்கு பின்பு சுடுகாட்டு பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஆட்டினை உண்பதற்காக சென்ற 3 வயது பெண் சிறுத்தை வசமாக சிக்கியது. சம்பவம் குறித்து அறிந்து வந்த வனச்சர கர் தலைமையிலான குழு சிறுத்தையை மீட்டு முதலுதவி அளித்து அடர் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
டிராக்டர் மோதி ஒருவர் பலி
சாத்தூர், செப்.15- சாத்தூரில் டிராக்டர் மோதி தொழிலாளி ஒருவர் உயிரி ழந்தார். மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருறது. இதில் விழுப்புரம் மாவட்டம் மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன் (60) சாத்தூர் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று விஜயரங்கன் கூடாரத்தின் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது சங்கர் என்பவர் அங்கிருந்த டிராக் டரை பின் நோக்கி எடுத்துள்ளார். அது எதிர்பாராதவிதமாக விஜயரங்கன் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். ஆனால், விஜயரங்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டாறில் மணல் திருட்டு இருவர் மீது வழக்கு; இரு லாரி பறிமுதல்
திருச்சுழி, செப்.15 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்று மணல் திருட்டு அதிகமாக நடைபெற்று வருவதாக திருச்சுழி காவல் துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து, திருச்சுழி காவல் ஆய்வாளர் அனிதா தலைமையில் காவல்துறை யினர் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழி குண்டாறு பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத மாக ஆற்றுமணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகளை பிடித்தனர். லாரி ஓட்டுநர்கள் தப்பியோடி விட்டனர். தொடர் விசாரணையில் லாரி உரிமையாளர்கள் அம்மன்பட்டியைச் சேர்ந்த மருது, அலெக்ஸ் என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இரு சக்கர வாகனம்-லாரி மோதி இருவர் பலி
திருச்சுழி, செப்.15- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இரு சக்கர வாக னத்தில் அதிவேகமாகச் சென்று நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். திருச்சுழி மிதலைக்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (24), அஜித் குமார் (21) உள்ளிட்ட மூன்று பேர் மதுஅருந்தி விட்டு இரு சக்கர வாகனத்தில் நரிக்குடியிலிருந்து மிதலைக்குளம் நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்துள்ளனர். மேல னேந்தல் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் முத்துப்பாண்டி(24), அஜித் குமார் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொ ருவர் உயிர் தப்பினார். நரிக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரின் உடலையும் மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு உடற் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.