முதலீட்டாளர்கள் மாநாட்டால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? மு.க. ஸ்டாலின் கேள்வி
திருநெல்வேலி, அக்.12- முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதின் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என நாங்குநேரியில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வியாழக்கிழ மை மாலை திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, சென்னையில் பிரம் மாண்டமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஆளும் கட்சி கூறுகிறது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப் பட்டது. இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? தமிழகத்தில் தினசரி கொலை,கொள்ளை,செயின்பறிப்பு என ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது என்றார்.
அக். 18ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு, அக். 12 - காஞ்சிபுரம் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் அக்டோபர் 18ம் தேதியன்று காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என்று நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். விவசாய பெருமக்கள் அனைவரும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மைத்துறை மற்றும் சார்பு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.