tamilnadu

காரில் கஞ்சா கடத்த முயற்சி 3 பேர் கைது

திருநெல்வேலி, ஜூன் 13-  வாகன தணிக்கையின் போது காரில் நிற்காமல் சென்ற  இருவரை துரத்திப் பிடித்து1 கைது செய்த நாங்குநேரி காவல்து றையினர், அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாங்கு நேரி டோல்கேட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அவ்வழியாக காரில் வந்தவர்களை நிறுத்த சொன்னபோது நிறுத்தாமல் வேகமாக சென்றனர். பின்  அவர்களை போலீசார் பின் தொடர்ந்து பிடித்து விசாரணை  செய்ததில், காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் இருந்த திருவனந்தபுரம் காட்டா கடா பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன்(21), அபி ஜித் (23) ஆகியோரை கஞ்சா வழக்கில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்கு பதிவு செய்து அரவிந்த் கிருஷ்ணன், அபிஜித் ஆகிய இருவரையும் கைது செய்த னர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, அவர்களி டமிருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.