தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு தென்காசி மாவட்டத்தில் சக்தி நகரிலிருந்து பேரணியுடன் துவங்கியது. மாநில தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் பேரணிக்கு தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சம்மேளன பொது செயலாளர் கே.திருச்செல்வன், மாநில பொருளாளர் எஸ்.பாப்பூ, மாநில துணைத் தலைவர்கள் எம்.மகாலட்சுமி, ஆர்.எஸ்.செண்பகம், வரவேற்புக் குழு தலைவர் பேரா.சங்கரி, சம்மேளன மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, ஆரிய முல்லை, சிஐடியு மாவட்டத் தலைவர் அயூப்கான், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் தர்மராஜ் மற்றும் மாநில சம்மேளன உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி புது பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. திங்களன்று (28.8.23)குற்றாலத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.