tamilnadu

img

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்...

திருநெல்வேலி:
அஞ்சல் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனசை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், கொரோனா பாதித்த  ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்புவழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டைதலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் ஊழியர்சங்க கோட்டத் தலைவர்கள் அழகுமுத்து,சீனிவாச சொக்கலிங்கம்  ஆகியோர் தலைமை வகித்தனர் .கோட்ட செயலாளர்ஜேக்கப் ராஜ்  துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் வண்ணமுத்து, மாநில அமைப்புச் செயலாளர் புஷ்பகரன், ஓய்வூதியர் சங்கசண்முகசுந்தர ராஜா, உதவி செயலாளர்விஜய ராஜா ஆகியோர்  பேசினர்.  குத்தாலிங்கம்,கண்ணன், ராஜேந்திர போஸ் ,அருண்குமார் இசக்கியம்மாள் ,முத்துப்பேச்சி அம்மாள் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.