திருநெல்வேலி:
உலக ஓய்வூதியர் தினம்மத்திய- மாநில அரசு மற்றும்பொதுத்துறை ஓய்வூதியர்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக நெல்லை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது.
வண்ணாரப்பேட்டை அரசு விரைவுப்பேருந்து டெப்போ முன்புறம் மாவட்டத்தலைவர் கோமதிநாயகம் தலைமையில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மூத்த தலைவர் ராஜாமணி துவக்கி வைத்தார். அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ராஜேஸ்வரன்,போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத்தின் வெங்கடாசலம், அனைத்து ஆசிரியர் ஓய்வூதியர் சங்கத்தின் பொன்ராஜ் ஆகியோர் பேசினர்.அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலசெயலாளர் ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். வட்டப்பொருளாளர் நெடுஞ்செழியன் நன்றிகூறினார்.