tamilnadu

img

அங்கீகரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குக! சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி, ஆக.11- சத்துணவு ஊழியர்கள் அனை வருக்கும் ஊதியக்குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என நெல்லையில் நடை பெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் வலி யுறுத்தியுள்ளது. பாளை நவஜீவன் டிரஸ்டில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் ஆண்டு பேரவை கூட்டம் நடை பெற்றது. சங்க மாவட்டத் தலைவர் பிச்சு மணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் வர வேற்றார். சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலை வர் நாராயணன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலா ளர் பா.கோவில் பிச்சை செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் வீரராஜ் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.  சத்துணவு ஊழியர்கள் அனை வருக்கும் ஊதியக் குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலு வைத் தொகையை ரொக்கமாக வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய ஒய்வூதியம் ரூ.7850 வழங் கிட வேண்டும். உயர்ந்து வரும் விலை வாசிக்கேற்ப மானியத் தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூ.5.50 வழங்கிட வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பா ளருக்கு ரூ.5 லட்சம், சமையலர்-உதவி யாளர்களுக்கு ரூ.3 லட்சம் என ஒட்டு மொத்த தொகையாக வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கிட வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பணி யிடங்களை தமிழக அரசு காலதாம தமின்றி நிரப்பிட வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்துள்ள சமை யலர் மற்றும் உதவியாளர்களுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி அமைப்பாளர் பணி உடனடியாக வழங்கிட வேண்டும். 25 மாணவர்களுக்கு குறைவான மையங்களை துணை மையங்களாக மாற்றும் போது அங்கு பணிபுரியும் ஊழி யர்களின் விருப்பத்திற்கேற்ப இட மாறுதல் செய்ய வேண்டும்.  அரசால் அறிவிக்கப்படும் ஊழியர் நலன் சார்ந்த விசயங்கள் அனைத்தும் தாமதமின்றி உரிய காலத்தில் ஊழியர்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன் கருதி திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நூர் ஜஹான்  நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பிச்சையா நன்றி கூறினார்.