அவிநாசி, அக். 25- காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் அவிநாசியில் வியாழனன்று பிரச்சாரம் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரைய றுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு பணி ஊதியமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மத்திய அரசின் குறைந் தபட்ச ஊதியம் ரூ.9ஆயிரம் சத்துணவு ஊழி யர்களுக்கு வழங்க வேண்டும். சத்து ணவு மையங்களில் ஏற்பட்டுள்ள அமைப் பாளர், சமையலர், உதவியாளர் காலிப்ப ணியிடங்களை நிரப்ப வேண்டும். விலை வாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத் தொகை உயர்த்தி வழங்கக் கோரி அவி நாசி ஒன்றியத்தில் பிரச்சாரம் நடை பெற்றது. இப்பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றிய தலைவர் எம்.விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் எஸ்.தனலட்சுமி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ஜி.கற்பகம், ஒன்றிய செயலாளர் வி.சுமதி, மாவட்ட. இணை செயலாளர் ஆர்.நாகராஜன் மற்றும் அரசு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.கருப்பன், மாவட்ட இணை செயலாளர் ராமன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட தலைவர் சிவகுமார், ஊரக வளர்ச்சித் துறை சங்க நிர்வாகிகள் தவமணி, வெள்ளிங்கிரி மற்றும் மாவட்ட செயலாளர் ஆர்.ராம சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஒன்றிய பொருளாளர் ஏ.மீனா குமாரி நன்றி கூறினார்.