ஆக.9 பாளை.யில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
திருநெல்வேலி, ஆக. 4 திருநெல்வேலி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பாளை யங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி நடை பெறுகின்றன. இது தொடர்பாக திரு நெல்வேலி மாவட்ட தடகள சங்கத் தலைவர் அய்யாதுரை பாண்டியன், செயலர் வீ.பி.பாரதி ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான தடக ளப் போட்டிகள் பாளை யங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. 14, 16, 18, 20 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போ ட்டியில் பங்கேற்பவர்க ளுக்கு சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும். இப்போட்டியில் பங்கே ற்கும் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பங்கேற்கும் போட்டி ஆகியவற்றின் விவ ரங்களை உரிய படிவத்தில் நிரப்பி வரும் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்ன தாக திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கம், தரை தளம், லைப் ஸ்டைல் அபா ர்ட்மென்ட், ராமலிங்கா நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நுழைவுக் கட்டணம் ரூ.50. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்க னைகள் வரும் 30-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற வுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9486866709, 8300021575, 9629780835 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
7.5 பவுன் நகை பறித்தவர் கைது: இருவர் தப்பி ஓட்டம்
நாகர்கோவில், ஆக.4- வெள்ளிசந்தை அருகே மேலசங்கரன்குழி ஒற்றையால் குடி பகுதியை சேர்ந்தவர் பரம சிவன். இவரது மனைவி சைலஜா (48). இவர் சனியன்று மாலை வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக ஆசாரிபள்ளத்திற்கு வந்தார். கடையில் பொருட்கள் வாங்கி விட்டு பேருந்தில் மேலசங்கரன்குழிக்கு வந்தார். பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் சைலஜாவை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை தாக்கி அவரின் கழுத்தில் கிடந்த 7.5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். சைலஜாவின் கூச்சல் கேட்டு பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். அவர்கள் சைலஜாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்த திருடர்களை சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் மட்டும் பொதுமக்கள் கையில் சிக்கினார். மற்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதுகுறித்து வெள்ளிசந்தை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் துறையினர் திருடனை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சைலஜா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்தனர்.