நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் 2 பேருக்கும், மன்னார்கோவிலில் 2 பேருக்கும் என 4 பேருக்கு கொரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நான்கு பேரில் ஒருவர் பெண் ஆவார். நான்கு பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.