tamilnadu

வெடிபொருள் விற்பனை  நிலையங்களை மூட உத்தரவு

திருநெல்வேலி, அக்.20- நெல்லை மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்களை 6 நாட்கள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார். மேலும் அதில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் திங்கட்கிழமை நடக்கிறது. அக்.24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடை பெறுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்களும், அனைத்து வெடிபொருள் கிடங்குகளும் அக்.20 (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்.25-ம் தேதி வரை 6 நாட்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மேற்கண்ட 6 நாட்களும் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளையும் திறந்து வைத்து இருக்க கூடாது. எந்த வியாபாரமும் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார்.