tamilnadu

img

நெல்லை, தூத்துக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக. 27- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.7500 6 மாதத்துக்கு  வழங்கிட கோரியும், ரேசன் கடை களில் அனைத்து பொருட்களையும் இலவச மாக வழங்கிடகோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியன் தலை மை தாங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். இதில் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், இடைகமிட்டி உறுப்பினர் ஜோதி உட்பட பலர் கலந்து கொண் டனர். பாளையில் குலவணிகர்புரம்,மேல பாளையம்,வி.எம்.சத்திரம் பகுதிகளில்  நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன்,பாளை தாலுகா செய லாளர் வரகுணன்,மாவட்டக்குழு உறுப்பினர் கள் பெருமாள்,பீர்முகமதுஷா,தாலுகாகுழு உறுப்பினர்கள் கருணா,சங்கர்,போக்குவரத்து சங்க தலைவர்கள் ஜோதி,காமராஜ்,மின் ஊழி யர் சங்க தலைவர் வண்ணமுத்து,கிளை செய லாளர்கள் பேரின்பராஜ்,செல்வம்,லிகாய் சங்க தலைவர் குழந்தைவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.   நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி  ஒன்றியம் பொட்டலில்  மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அரிராம்,   தங்க ராஜ்.நாகராஜன் உள்பட பலரும்  வல்லத்து நம்பிகுளத்தில் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சகுந்தலா மேரி, சகாயமேரி.வெள்ளத்துரை, முடியப்பர் உள்பட பலரும்.வீரவநல்லூர் தெற்கு கிளையில் மல் லிகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில்  ரமேஷ்பாபு. ஜீ.கண்ணன். ராஜம். புவனேஸ் வரி உள்பட பலரும் கலந்து கொண்டனர். கல்லிடைக் குறிச்சியில்  தெற்குபுதுதெரு கிளையில் சந்தானம் தலைமையிலும் வைராவிகுளத்தில் ராமர்கனி தலைமையிலும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  

தூத்துக்குடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இளம்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கிளை செயலாளர் மூக்கையா தலை மை தாங்கினார். தாலுகா செயலாளர் கு. ரவீந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் கருப்பசாமி, செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம்  தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் வியாழனன்று மட்டக்கடையில் பிரச்சார  இயக்கம் நடைபெற்றது.    அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட க்குழு உறுப்பி னர் குமாரவேல், வாலிபர் சங்க  மாவட்ட செய லாளர் எம்.எஸ்முத்து, கிளை செயலாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.