tamilnadu

img

தோழர் ஜெயப்பாண்டி காலமானார் 

 திருநெல்வேலி, ஆக.11- நெல்லையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணி யாற்றி ஒய்வு பெற்ற தோழர் டி.ஜெய பாண்டி(62) உடல்நல குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்த வர் தோழர் டி.ஜெயப்பாண்டி. இவர் நெல்லை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணி யாற்றி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவர் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பணி மனை தலைவராக நீண்ட வருடங்கள் செயலாற்றியவர். அதோடு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்த வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி தோழர் ஜெயபாண்டி தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் காலமானார். அவருக்கு ஷர்மிள் என்ற மனைவியும் ஜெனிஷா என்ற மகளும் உள்ளனர். மறைந்த தோழர் ஜெயப்பாண்டியின் இறுதி நிகழ்ச்சி நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பயோனியர் குமார சாமி நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, துரை, ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், பாளை தாலுகா செயலா ளர் பா.வரகுணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். பெருமாள், கு.பழனி, மாரிச்செல்வம், சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் வெங்க டேசன், சுதர்சிங், அருண் மற்றும் தி.சந்திரசேகர், ரவி சண்முகம், செல்லையா மற்றும் கட்சி தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.